தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை நாள்தோறும் குறிப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மேலும் புதிதாக 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,185 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமாகி 3,591 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதேபோல், கொரோனா தொற்றுக்கு இன்று அதிகபட்சமாக 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,898 ஆக உயர்ந்துள்ளது.