இம்ரான்கான் மனைவிக்கும் கொரோனா தொற்று!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி புஷ்ரா பிபிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சில நாட்களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது மனைவி புஷ்ரா பிபியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இம்ரான்கான்  தனது ட்வீட்டர் பதிவில், தனக்காகவும் தன் மனைவிக்காகவும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இம்ரான்கான் தனது அலுவலகப் பணிகளை காணொளி கான்பரனஸ் வாயிலாக தொடர்வார் என்று அவரது உதவியாளர் ஷாபாஸ் கில் தகவல் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே