மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு கொரோனா தொற்று..!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேளச்சேரி வேட்பாளரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பின்னர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேளச்சேரி வேட்பாளரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதனைதொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து தனக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், டிஜிட்டல் முறையில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாக அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே