பழனி திமுக எம்.எல்.ஏ செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.வின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் ஆளுநர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று தஞ்சை தொகுதி திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கனவே பேராவூரணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மா. கோவிந்தராசு, ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.