சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், தீயணைப்பு நிலைய வீரருக்கு கொரோனா உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அவர் வெளியூர் சென்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டது.
இதனையடுத்து அவர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனிடையே சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதில், தண்டையார்பேட்டை மண்டலத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு, 362 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.