தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் 6,993 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 6,993 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,138 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,20,716 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய அறிவிப்பில் மேலும் 77 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 3,571 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று மட்டும் 5,723 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,62,249 பேர் குணமடைந்துள்ளனர்.