தமிழகத்தில் புதிதாக 5,015 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், பலியானோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
புதிதாக 5,015 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,56,385 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 1,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 65 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 10,252 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஒரேநாளில் 5,005 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,02,038 பேர் குணமடைந்துள்ளனர்.