தமிழகத்தில் இன்று 451 பேருக்கு கொரோனா..; 7 பேர் உயிரிழப்பு..!!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 451 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 451 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது மாநிலம் முழுவதும் 4,206 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 49ஆவது நாளாக இன்றும் ஆயிரத்திற்கும் குறைவான நபர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை மாநிலத்தில் 8,46,026 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா காரணமாக இன்று ஏழு பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,432ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 470 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல தலைநகர் சென்னையில் இன்று 149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இன்று 50,800 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் தற்போது வரை 1,68,63,820 பேருக்கு கொரோனா கண்டறியும் சோதனை செய்யப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே