தமிழகத்தில் இன்று 3,581 பேருக்கு கரோனா; சென்னையில் 1,344 பேருக்குத் தொற்று: 1,813 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்று 3,581 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 1,344 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. 1,813 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,99,807. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 2,53,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,65,071.

இன்று வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 19 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 37,86,779.

சென்னையில் 1,344 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 2,237 பேருக்குத் தொற்று உள்ளது.

  • தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 190 தனியார் ஆய்வகங்கள் என 259 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

  • தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 21,958.
  • மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,99,32,179.
  • இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 82,791.
  • மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8,99,807.
  • இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 3,581.
  • சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,334.
  • மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 5,43,189 பேர். பெண்கள் 3,56,582 பேர். மூன்றாம் பாலினத்தவர் 36 பேர்.
  • தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,170 பேர். பெண்கள் 1,411 பேர்.
  • இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,813 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,65,071 பேர்.
  • இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 14 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 7 பேர் தனியார் மருத்துவமனையிலும், 7 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,778 ஆக உள்ளது. சென்னையில் 4 பேர் உயிரிழந்தனர். சென்னையில் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 4,268.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 12 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 2 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே