தமிழகத்தில் இன்று (அக். 24) 2886 பேருக்கு கொரோனா..; 35 பேர் உயிரிழப்பு..!!

தமிழகத்தில் புதிதாக 2,886 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 2,886 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,06,136 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 779 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 35 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 4,024 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே