நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.58 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.13 கோடியை  தாண்டியது.

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 24,492 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,14,09,831 ஆக உயர்ந்தது.
* புதிதாக 131 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,58,856 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 20,191 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,10,27,543 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,23,432 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 96.65% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.39% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.96% ஆக குறைந்துள்ளது.

*இதுவரை இந்தியாவில் 3,29,47,432 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

* கடந்த டிசம்பர் 2ம் வாரத்தில் இருந்து இதுவரை கொரோனா பாதிப்பு விகிதம் 33% அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே