ம.பி.யில் அதிகரிக்கும் கரோனா பரவல்: போபால், இந்தூர், ஜபல்பூரில் முழு ஊரரடங்கு அமல்: வெறிச்சோடிய சாலைகள்

மத்திய பிரதேசத்தில் கரோனா பரவல் அதிகரிப்பதன் எதிரொலியாக போபால், இந்தூர், ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது,

நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.

மத்தியபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் வார பாதிப்பு 19ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.

மகாராஷ்டிராவி, நாக்பூர், அமராவதி, தானே உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதித்த பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம்

மகாராஷ்டிராவுக்கு அருகில் உள்ள மாநிலமான மத்திய பிரதேசத்திலும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

மத்திய பிரதேசத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1200 ஐ நெருங்குகிறது. இதைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு நடவடிக்கையாக பல நகரங்களில் இரவு நேர ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ளது.

இந்த நிலையில் இந்தூர், ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில், ஞாயிறு தோறும் முழு ஊரடங்கை மத்திய பிரதேச அரசு அறிவித்தது. இந்த 3 முக்கிய நகரங்களிலும், மறு அறிவிப்பு வரும் வரை எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

போபால், இந்தூர், ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில் முழு ஊரடங்கு என்பதால் சாலைகளில் வாகனங்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே