இந்தியாவில் 23 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு… உயிரிழப்புகள் 46,091!!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,29,638 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 60,963 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 834 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46,091 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16,39,599 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் தற்போது வரை கொரோனாவால் பாதித்த 6,43,600 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,50,219 பேரும், ஆந்திராவில் 88,434 பேரும், கர்நாடகாவில் 78,851 பேரும், தமிழகத்தில் 52,862 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே