தமிழ்நாட்டில் இன்று (நவ.08) 2,334 பேருக்கு கொரோனா உறுதி..; 20 பேர் உயிரிழப்பு..!!

தமிழகத்தில் புதிதாக 2,334 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 2,334 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,43,822 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் 601 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 20 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,344 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 2,386 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,13,584 பேர் குணமடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே