தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதன் காரணமாக கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனிமைப்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆளுநருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.