நேற்று தமிழகத்தில் 2,532 பேருக்கு கொரோனா உறுதி !! 53 பேர் பலி..,

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களாக அதிகமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இதுவரை இல்லாத அளவாக தமிழகம் முழுவதும் 2,532 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 59,377 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 757 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 32,754 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று சென்னையில் மட்டும் 1,493 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 41,172 ஆக அதிகரித்துள்ளது. அதே போல முன்னெப்போதும் இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 757 ஆக அதிகரித்துள்ளது. 1,438 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 32,754 பேர் குணமடைந்துள்ளனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே