சென்னை மாநகராட்சி சார்பாக கொரோனா தொற்று விழிப்புணர்வு பணிக்கான எல்இடி வீடியோ வாகன சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் இந்த சேவை தொடக்கி வைக்கப்பட்டது. மேலும், கொரோனா, டெங்கு, மழைநீர் சேகரிப்பு குறித்து 10 லட்சம் இல்லங்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டது.
அதேபோல, பாலங்களில் மாறும் வண்ண விளக்குகள் சேவையையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு செல்போன் குரல் மூலம் முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் , விஜயபாஸ்கர், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.