பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் வாரத்திற்கு 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும்..; அரசாணை வெளியீடு..!!

தமிழகத்தில் வாரத்திற்கு 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இருப்பினும் பொதுத் தேர்வு நெருங்கி வருவதால் கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

அந்த வகையில் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கும் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. 

அதேநாளில் கலை, அறிவியல், தொழில்நுட்ப ,பொறியியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கல்லூரிகளில் மாணவர்கள் விடுதிகளும் செயல்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிப்ரவரி 8 ஆம் முதல் திறக்கப்படும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த கல்வியாண்டு முழுவதும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே