இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333ஆக உயர்வு!

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 -ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 4,531 பேர் பலியாகிவிட்டனா். வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 6,566 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது;

194 பேர் பலியாகியுள்ளனர். நாட்டில் தொடர்ந்து 7வது நாளாக தொற்று பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் ‘கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 67,692 பேர் குணமடைந்தனா்.

86,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனா். 194 பேர் பலியாகியுள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் இதுவரை 56,948 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 18,545 பேரும், குஜராத்தில் குஜராத் 15,195 பேரும், தில்லியில் 15,257 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவா்களில் 70 சதவீதம் பேர் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனா் என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே