மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்..!!

நாளை முதல் முழு ஊரடங்கு அமலாவதால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், “கொரோனா நிவாரண தொகை அனைத்து மக்களுக்கும் முழுமையாக சென்றடைந்ததா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். 

காய்கறி, பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் தடையின்றி கிடைப்பதை உள்ளாட்சித்துறை, வேளாண் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.அதிகார மோதல்கள், ஈகோ இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனா எனும் பெருந்தொற்றை வீழ்த்த வேண்டும். யார் பெரியவர் யார்? அதிகாரத்துக்கு கட்டுப்படுவது எனப் பார்க்காமல் மாவட்ட ஆட்சியர்கள் செயல்பட வேண்டும்.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.கொரோனா நிவாரண தொகை பயனாளிகளுக்கு சென்று சேர்ந்து இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

பால் விநியோகமும் தங்குதடையின்றி நடைபெறுவதை ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் ” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “கொரோனாவுக்கு கூடிய விரைவாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் முழு திறமையையும், அனுபவத்தையும் பயன்படுத்த வேண்டும்.

ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் சங்கிலியை உடைத்த ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனது முயற்சிகளால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது என தலைநிமிர்ந்து நீங்கள் சொல்லும் அளவுக்கு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்; உங்களால் அது முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே