முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் – சீமான், பாரதிராஜா பேட்டி..!!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி முதல்வரிடம் சீமான், பாரதிராஜா வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா சந்தித்தனர்.அப்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்த அவர்கள், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி முதல்வரிடம் சீமான், பாரதிராஜா வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், பாரதிராஜா, ” பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை சிறையில் இருந்து விடுவிக்க முதல்வர் ஸ்டாலினிடன் வலியுறுத்தியுள்ளோம். முதல்வர் ஸ்டாலின் ஏழு பேர் குறித்த விடுதலையில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழக அரசின் செயல்பாடுகள் சரியாக உள்ளது; எல்லா துறையும் வேகமாக இயங்குகின்றன. மருத்துவத்துறையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட எல்லோருமே நன்றாக இயங்குகின்றனர்.

என் அப்பா மறைவின்போது முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஆனால் அவர் நினைத்திருந்தால் அத்தோடு நிறுத்தி இருக்கலாம். எனக்கு அவர் தொலைபேசியில் அழைப்பு விடுத்து பேசியது எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது அதனால் அவரை சந்தித்து பேச வேண்டும் என்று நினைத்தேன்” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே