12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

12 மணி நேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உழைப்பாளர் தினத்தையொட்டி சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவுச் சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மே தின உறுதிமொழி ஏற்ற பிறகு, மேடையில் பேசிய முதலமைச்சர் ஏப்ரல் 21 அன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக ஏப்ரல் 24ந் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

மசோதா திரும்பப் பெறப்பட்டது குறித்து அனைத்து சட்டசபை உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே