சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 41-வது ஆட்டத்தில் சென்னை, மும்பை அணிகள் சார்ஜாவில் இன்று (வெள்ளிக்கிழமை) விளையாடுகின்றன.

டாஸ் வென்ற மும்பை கேப்டன் போலார்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உடல்நலக் குறைவு காரணமாக இன்று விளையாடததை அடுத்து போலார்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை அணியில் ரோஹித் சர்மாவிற்கு பதில் செளரவ் திவாரி சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை அணியில் ஜெகதீசன், ருத்துராஜ் மற்றும் இம்ரான் தாஹிர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே