சி.பி.எஸ்.இ 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் : மத்திய அரசு

சிபிஎஸ்இ பாடப்பிரிவில் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் இன்றி, அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெறுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், கொரோனா பாதிப்பையொட்டி தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ பாடப்பிரிவில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் முந்தைய தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே