காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம்..; உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் – கர்நாடகா எதிர்ப்பு..!!

தென் தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு, கடந்த 21 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இந்தத் திட்டத்திற்கு கர்நாடக ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கர்நாடக அரசு, இன்று (24.02.2021) மீண்டும் கூறியுள்ளது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை, டெல்லியில் சந்தித்துப் பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை கர்நாடகா ஒருபோதும் ஏற்காது எனவும், இந்தத் திட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை கேட்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே