நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தோர் மீது வழக்குப்பதிவு..!!

சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபாவளியையொட்டி தமிழகத்தில் காலை ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரமும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பூந்தமல்லி, போருர், ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர், மாங்காடு உள்ளிட்ட அம்பத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

வீதி,வீதியாக சென்று பட்டாசு வெடிப்பவர்களை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே