புளிப்பாக சாப்பிட்டால் மாதவிடாய் வலி அதிகமாகுமா? இன்னும் என்னென்ன வதந்திகள் இருக்கு…

பெண்களின் மாதவிடாய் குறித்து இன்றளவும் மக்களிடையே நிறைய கட்டுக்கதைகள் நிரம்பி இருக்கின்றன. அதையெல்லாம் களையும் விதத்தில் மகளிர் நல மருத்துவர் நிறைய தெளிவான உரைகளை நமக்கு வழங்குகிறார். இதன் மூலம் எது கட்டுக்கதைகள் எது உண்மை என அறிந்து கொள்வோம்.
மாதவிடாய் பிடிப்பு அதிகமாக வலிப்பதற்கும் நாம் உண்ணும் உணவுக்கும் எதாவது சம்பந்தம் உள்ளதா. ஏனெனில் இது குறித்து நிறைய கட்டுக்கதைகள் கூறப்படுகிறது. புளித்த உணவுகள் மாதவிடாய் காலத்தை மோசமாக்கும் என்று கூறப்பட்ட கட்டுக்கதைகளை உடைக்கும் விதமாக மகளிர் நல மருத்துவர் இவ்வாறு கூறுகிறார்.
அன்றைய கால கட்டத்தில் மாதவிடாயை ஒரு அசுத்தம் மற்றும் தீட்டு என்று கூறி வந்தனர். மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களை ஒதுக்குப்புறமாக வைத்தல், வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்தல் போன்ற செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டது உண்டு. இப்படி ஏன் மாதவிடாய் மீது மட்டும் ஏராளமான கட்டுக் கதைகள் விலாசப்பட்டது.

அந்தக் கட்டுக்கதைகளை அவிழ்க்கும் விதமாக மகப்பேறியியல் நிபுணர் இதைப் பற்றி நம்மிடம் விளக்குகிறார்.

​மாதவிடாய் இரத்தம் அசுத்தமானது
புராண காலத்தில் இருந்து பெண்களின் மாதவிடாய் அசுத்தமானது. அந்தக் காலங்களில் வெளிவரும் இரத்தம் அழுக்கானது என்று கூறப்பட்டு வந்தது.

ஆனால் இந்த கட்டுக்கதைகள் உண்மையல்ல. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதால் ஒவ்வொரு மாதமும் கருப்பை சாத்தியமான கர்ப்பத்தை ஆதரிக்க ஒரு புறணி உருவாகிறது. கருப்பைகள் வெளியிடும் முட்டை ஒரு விந்தணுக்களால் கருவுறாமல், கர்ப்பம் இல்லாதபோது, ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் மட்டத்தில் ஒரு குறைவு ஏற்படும் போது, கருப்பை புறணி மாதவிடாய் சுழற்சியின் முடிவில் தன்னைத்தானே அழித்துக் கொண்டு இரத்தத்தை சிந்துகிறது.

எனவே பெண்களின் மாதவிடாயின் போது வரும் இரத்தம் அழுக்கு இரத்தம் அல்ல. ஏனெனில் கருப்பை புறணி உருவாக அதிக இரத்தம் தேவைப்படுகிறது.

​பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள்
பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் பெண்களுக்கு மாதவிடாய் முன் நோய்க்குறி (பி.எம்.எஸ்) சிகிச்சையளிப்பதற்கான தீர்வுகளில் ஒன்றாகும். இது அவர்களின் உடலில் உள்ள ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக ஏற்படுகிறது. இந்த மாத்திரைகளில் ஹார்மோனை சமநிலைப்படுத்த ஹார்மோன்கள் உள்ளன.

இருப்பினும், சுறுசுறுப்பாக இருப்பது மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்வது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் PMS இன் அறிகுறிகளை பெருமளவில் நிவர்த்தி செய்ய உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். ஒன்றாக நேரம் செலவழிக்கும் பெண்களுக்கு ஒரே மாதிரியாக மாதவிடாய் ஏற்படுகிறது

ஒன்றாக நேரம் செலவிடும் பெண்கள் தங்கள் காலத்தை ஒன்றாகவோ அல்லது ஒரே நேரத்தில் பெறவோ செய்கிறார்கள். இது 1971 ல் வெளியிடப்பட்ட மாதவிடாய் ஒத்திசைவு கோட்பாட்டின் கீழ் வருகிறது.

ஏன் இப்படி ஏற்படுகிறது என்றால் பெண்களின் பெரோமோன்கள் (விலங்குகளால் சூழலில் வெளியிடப்படும் இரசாயன பொருட்கள்) காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த கூற்றை ஆதரிக்க அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை. ஒரு பெண் மாதத்தின் தொடக்கத்தில் மாதவிடாய் பெற்றால் மற்றொரு பெண் மாதத்தின் நடுப்பகுதியில் மாதவிடாயை பெற நேரிடலாம். அவர்கள் ஒரே அறையில் தங்கி இருந்தால் அடுத்த மறுசுழற்சியும் இதே மாதிரி நடக்கிறது.

உணவுப்பழக்கம் மாதவிடாயை பாதிக்குமா
இரும்புச்சத்து குறைபாடு காரணமாக குறைந்த ஹீமோகுளோபின் கொண்ட ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் காலம் என்பது வசதியாக இருக்காது. உண்மையில், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களின் எந்தவொரு குறைபாடும் ஒழுங்கற்ற காலங்கள் போன்ற மாதவிடாய் பிரச்சினைகளை உங்களுக்குத் தர வாய்ப்பு உள்ளது. இதேபோல், உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது ஒரு பெண்ணை பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) பெற அதிக வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு உங்க மாதவிடாய் சுழற்சியையும், ஆரோக்கியத்தை பாதிக்கும்.

​உடலுறவு கொள்வது கர்ப்பமாக்குமா
ஒரு பெண் தனது மாதவிடாய் காலகட்டத்தில் இருக்கும்போது பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டால் கர்ப்பம் தரிப்பது குறைவு. ஏனென்றால், ஒரு பெண் வழக்கமாக தனது மாதவிடாய் சுழற்சியின் ஆரம்ப ஐந்து நாட்களில் தனது இரத்த போக்கை பெறுகிறாள். அதே நேரத்தில் அண்ட விடுப்பின் சுழற்சியின் 14 முதல் 16 வது நாளுக்கு இடையில் உடலுறவு கொண்டால் கருதரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மாதவிடாய் சுழற்சியின் போது ஒழுங்கற்ற காலங்கள் மற்றும் அனுபவங்களைப் பெறும் ஒருவருக்கு, பாதுகாப்பற்ற கால உடலுறவு காரணமாக கர்ப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே எப்பொழுதும் பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வதே சிறந்தது.

​டம்பான்கள் பிறப்புறுப்பில் காணாமல் போக வாய்ப்புள்ளதா?
பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இரத்த போக்கை உறிஞ்ச பருத்தி மற்றும் ரேயான் போன்ற உறிஞ்சக்கூடிய பொருட்களால் ஆன சிறிய டம்பான்கள் பயன்படுகின்றன. இதை பெண்ணுறுப்பில் பொருத்தி மாதவிடாய் இரத்த போக்கை உறிஞ்ச முடியும். ஆனால் நிறைய பேருக்கு இந்த டம்பான்கள் பெண்ணுறுப்பில் சிக்கிக் கொள்ளுமோ அல்லது வெளியே எடுக்க முடியாத அளவிற்கு மாட்டிக் கொள்ளுமோ என்ற எண் இருக்கிறது. ஆனால் இந்த டம்பான்களின் வெளியே ஒரு நூல் தொங்கும். அதை இழுப்பதன் மூலம் இதை வெளியே எடுக்க முடியும்.

ஆனால் நிறைய பெண்கள் இந்த டம்பான்களை வெளியே எடுக்க மறந்து விடுகிறார்கள். பிறகு காணவில்லை என்று கூறுவதுண்டு. கண்டிப்பாக டம்பான்கள் உங்க பெண்ணுறுப்பு பகுதியில் தான் இருக்கும் அது எங்கும் போகாது என்றும் மகளிர் நல மருத்துவர் விளக்கமளிக்கிறார்.

​குளிக்க கூடாதா?
பொதுவாக மாதவிடாய் காலங்களில் குளிக்கும் போது அது மாதவிடாய் அறிகுறிகளை மேலும் மோசமாக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையல்ல மாதவிடாய் காலங்களில் பெண்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த கால கட்டத்தில் பெண்கள் நாப்கின்கள், டம்பான்களை பயன்படுத்துவதால் அவர்களின் பெண்ணுறுப்பில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே குளித்து அந்த பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.

​உடற்பயிற்சி செய்யக் கூடாதா?
பெண்கள் மாதவிடாய் காலங்களில் உடற்பயிற்சி செய்வது அவர்களின் மாதவிடாய் இரத்த போக்கை மோசமாக்கும் என்று பலர் நம்புகின்றனர். ஆனால் உண்மையில் உடற்பயிற்சி செய்வதால் உங்க மாதவிடாயில் எந்த மாற்றங்களும் இல்லை. ஆனால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் நாப்கின்கள் உங்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தலாம். இதனால் பெண்கள் உடற்பயிற்சி செய்ய தயங்கக் கூடும். மற்றபடி எந்த பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறுகிறார்.

உடற்பயிற்சி உடலில் எண்டோர்பின்ஸ் எனப்படும் மகிழ்ச்சியான ஹார்மோன்களை உருவாக்குகிறது. இது நிச்சயமாக உங்கள் மனநிலையை மேம்படுத்தலாம் மற்றும் உங்கள் மாதவிடாய் கால மனநிலையை சிறப்பாக சமாளிக்க உதவும் என்று மகளிர் நல மருத்துவர் கூறுகிறார்.

​புளித்த உணவுகள் மோசமாக்குமா
புளித்த உணவுகள் மாதவிடாய் காலத்தை மோசமாக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. மாதவிடாயில் உள்ள அடிப்படைக் காரணம் 28 நாள் சுழற்சியின் போது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் ஏற்ற இறக்கத்தால் தான் பிரச்சனை ஏற்படுகிறது. புளிப்பு உணவுகள் இந்த ஹார்மோன்களில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது, எனவே இந்த கூற்று ஆதாரமற்றது.

​மாதவிடாய் காலங்களில் நீச்சல் அடிக்க முடியாது
மாதவிடாய் காலங்களில் நீச்சல் அடிக்கும் போது இரத்தப்போக்கு நீரில் கசிய வாய்ப்பு உள்ளது என்று நிறைய பேர் பயப்படுவது உண்டு. இதனால் நீச்சல் குளம் மாசுபடும் என்று நினைப்பதுண்டு. ஆனால் உண்மையில் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நீச்சல் குளத்தில் குளிக்கும் போது டம்பான்கள் பயன்படுத்துவது உங்க மாதவிடாய் இரத்த போக்கை உறிஞ்ச உதவியாக இருக்கும். ஆனால் நீரில் இருக்கும் போது பெண்ணுறுப்பில் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது தான் உங்களுக்கான பிரச்சினையே தவிர மாதவிடாய் காலங்களில் இரத்தப் போக்கால் நீச்சல் குளம் சிவப்பாக மாறி விடும் போன்ற கட்டுக்கதைகளை நம்பாதீர்கள் என்றும் மகளிர் நல மருத்துவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே