இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,03,832-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,602-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 6,35,757-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 687 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் எனவும்; 24 மணி நேரத்தில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 34,956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.