சேலம் மாவட்டத்தில் கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “சேலம் மாவட்டத்தில் ஆக்சன் படுக்கைகள் நிரம்பிவிட்டன.
கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். கொரோனா இறப்பை குறைத்து காட்டுகிறார்கள். இறப்பு விபரத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டும்” என்றார்.
இதையடுத்து அவரிடம் அதிமுக அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வராததால் தான் 2வது அலை பரவியதாக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ” உலகளவில் எந்த நாட்டிலும் கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
வல்லரசு நாடுகளில் கூட கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை” என்றார்.