#BREAKING : சென்னைக்கு சில கட்டுப்பாடுகள், தளர்வுகள் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை இரவுடன் முழுப் பொது முடக்கம் நிறைவடைய உள்ள நிலையில், ஜூலை 6 முதல் புதிய கட்டுப்பாடுகள் – தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நள்ளிரவுடன் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், திங்கள்கிழமை காலை முதல் கடைகள் திறப்பு குறித்து தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை காய்கறி, மளிகைக் கடைகள் திறந்திருக்கலாம்.

சென்னையில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தேநீர் கடைகள் திறந்திருக்கலாம்.

ஆனால், தேநீர் கடைகளில் பார்சல் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள் தவிர்த்து ஷோரூம்கள், பெரிய கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகை, ஜவுளிக்கடைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே