#BREAKING : நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் மூடல்; 5 பேருக்கு தொற்று

நெல்லை மாவட்டத்திலுள்ள இஸ்ரோவின் மகேந்திரகிரி திரவ இயக்க திட்ட மையம் 5 நாட்களுக்கு மூடப்படுகிறது. இஸ்ரோவில் பணியாற்றும் 5 பேருக்கு கடந்த ஒரே வாரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 213க்கும்  மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

இந்தியளவில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. இருப்பினும், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையே, திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு என்ற இடத்தில் மகேந்திரகிரியில் மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இயங்கி வருகிறது.

இங்கு செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ராக்கெட்டில் பொருத்தப்படும் கிரயோஜனிக் என்ஜின் சோதனை நடைபெறும்.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இங்கு வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வந்து பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில், இஸ்ரோவில் பணியாற்றும் 5 பேருக்கு ஒரே வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அதிகாரிகள் மற்றும் இஸ்ரோவில் பணிபுரியும் பிற தொழிலாளர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே