#BREAKING : பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ஃரிடிக்கு கொரோனா தொற்று உறுதி!

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி இன்று ட்விட்டரில் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதிப்படுத்தினார்.

கடந்த வியாழக்கிழமை முதல் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அப்ரிடி கூறினார். ஏற்கனவே டௌபிக் உமர் என்னும் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

தற்போது 40 வயதான அஃப்ரிடிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பதித்த 2வது பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி என்பது குறிப்பிடத்தக்கது.

அஃப்ரிடி வெளியிட செய்தியில், “வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை; என் உடல் மோசமாக வலித்தது. துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விரைவாக குணமடைய ரசிகர்களாகிய உங்களின் ஆசிர்வாதம் பிராத்தனைகளின்படி குணமாகி மீண்டு வருவேன். இன்ஷாஅல்லா, விரைவாக மீட்க பிரார்த்தனை தேவை, “என்று அஃபிர்டி ட்விட்டரில் தெரிவித்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே