சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இருவர் உயிரிழந்த சம்பவத்தில் சாத்தான்குள காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் இறந்த வழக்கை கொலை வழக்காக சிபிசிஐடி காவல் துறை இன்று பதிவு செய்துள்ளது.
உடல்நலக்குறைவால் இருவரும் உயிரிழந்ததாக போலீசார் கூறிய நிலையில் சித்ரவதை செய்தது அம்பலமாகியுள்ளது.
இந்த வழக்கில் கொலைக் குற்றவாளிகளாக உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் 4 காவலர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இவர்களில் ரகு கணேஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் இந்த வழக்கு விசாரணையை இன்றுதான் சிபிசிஐடி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.