#BREAKING : காலை 9.30 மணி முதல் இணையதளங்களில் தேர்வு முடிவுகளை காணலாம் – தமிழக தேர்வுத்துறை

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 8.16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் இன்று முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு அறிவிருந்த நிலையில் முடிவுகள் வெளிவந்துள்ளது.

அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.3 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் 89.41% தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் மாணவர்களை விட மாணவிகள் 5.39% அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் மாவட்டங்களிலேயே 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் திருப்பூர் மாவட்டத்தில்97.12 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று மாவட்டங்களில் திருப்பூர் முதலிடம் பெற்றுள்ளது.

காலை 9.30 மணி முதல் http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை காணலாம் என தமிழக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே