#BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 1,384 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய சமீபத்திய தகவலை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,384 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் இன்று உயிரிழப்பு.

சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 1,072 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே