தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 4,549 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் புதிதாக 4,549 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் 1,157 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய அறிவிப்பில் மேலும் 69 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 2,236 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று 5,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,07,416 பேர் குணமடைந்துள்ளனர்.