#BREAKING : அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதி

அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது.

இதனை தடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது.

சாதராண மக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் என அனைவருக்கும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், சமீப காலமாக அரசியலில் இருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் பரவி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், எம்.எல்.ஏ.கள்,எம்.பி.களை தொடர்ந்து, அமைச்சர்களையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.

அந்தவகையில் இன்று, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதியானது.

இதனைதொடர்ந்து அவர், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, அவரின் மனைவி மற்றும் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. 

இந்நிலையில், தற்போது அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதுவரை அதிமுகவில் 6 அமைச்சர்கள் உட்பட 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மற்றும் திமுகவில் 15 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே