#BREAKING : 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு – பள்ளிக்கல்வித்துறை

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது.

ஆனால் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நடந்த வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்தேர்வுகளில் கலந்து கொள்ளாத 32 ஆயிரம் மாணவர்கள், அந்த தேர்வை எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் மார்ச் 24 ஆம் தேதி நடந்த தேர்வை எழுதாத 32 ஆயிரம் மாணவர்களுள் 700 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.

அதனால் அந்த மாணவர்களுக்கு மட்டும் கடந்த 27 ஆம் தேதி மறுதேர்வு நடைபெற்றது. 289 மையங்களில் சுமார் 519 மாணவ, மாணவியர்கள் அந்த தேர்வை எழுதினர்.

இந்த நிலையில் நாளை மறுநாள் மறுதேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும்; பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் 8.16 பேர் எழுதிய பிளஸ் 1 ரிசல்டும், பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வு முடிவும் நாளை மறுநாள் வெளியாக உள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே