மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையின் போது பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசின் கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.

சட்டமன்ற இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் இமார்டி தேவியை ஆதரித்து ஒரு பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் செய்து பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, நவம்பர் 3ம் தேதி நடைபெறும் தேர்தலில், கை சின்னத்தில் பட்டனை அழுத்தி, காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என்று உரக்கப் பேசினார்.

பின்னர் தவறைத் திருத்திக் கொண்டு தாமரைச் சின்னத்தில் ஓட்டுப் போடுமாறு கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே