இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி ஆரோன் பிஞ்ச், மேத்யூ வடே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய மேத்யூ வடே இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடி ரன்கள் விளாசினார். ஆஸ்திரேலியா 11.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

16.5 ஓவரில் 150 ரன்னைக் கடந்தது.

மேக்ஸ்வெல் 31 பந்தில் அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்துள்ளது.

தீபக் சாஹர் 34 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 34 ரன்களும், டி நடராஜன் 33 ரன்களும், சாஹல் 41 ரன்களும், ஷர்துல் தாகூர் 43 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே