கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன.

இருப்பினும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து இளநிலை முதலாம், இரண்டாம் ஆண்டு, பிஇ உள்ளிட்ட கல்லூரி மாணவர்களுக்கு பருவ தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு ரத்து செய்ய யுஜிசி ஒப்புதல் அளிக்கவில்லை.

இதனால் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்பட்டன.

நடப்பு செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு செமஸ்டர் தேர்வு ஜனவரி மாதம் ஆன்லைன் வாயிலாக நடைபெறும். 

ஜனவரி 2 முதல் 20 ஆம் தேதி வரை நடப்பு செமஸ்டருக்கான எழுத்துத் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதுகுறித்த விரிவான அட்டவணை விரைவில் அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே