ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா

இறந்த அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பட நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கோவில் கட்டி வழிபடுவதை கண்டிருப்போம்.

தற்போது, உயிருடன் இருக்கும் முதலமைச்சருக்கு எம்எல்ஏ ஒருவர் கோவில் கட்ட பூமி பூஜை போட்டுள்ளார்.

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவர் கோவில் கட்ட திட்டமிட்டு பூமிபூஜை போட்டுள்ளார்.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில், கோபாலபுரம் தொகுதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ தலாரி வெங்கட்ராவ்.

இவர் கோபாலபுரம் மண்டலம், ராஜபாளையத்தில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டுவதற்காக இன்று அடிக்கல் நாட்டினார். 

இதுகுறித்து, எம்எல்ஏ தலாரி வெங்கட்ராவ் கூறியவை, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நலத்திட்டங்களை வருங்கால தலைமுறையினர் நினைவு கூறும் விதமாக, அவரை ஒரு கடவுளாகக் கருத வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கோவில் கட்டப்படுகிறது.

மக்களின் அவல நிலையை அறிந்துகொள்ள நாட்டின் யாருமே செய்யாத வகையில், ராஜசேகர ரெட்டியும் அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பாத யாத்திரை மேற்கொண்டு மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து, அதனை பல திட்டங்களாக அறிவித்து செயல்படுத்தி வருகின்றனர்.

ஒய்.எஸ். குடும்பத்தினரும் மக்களுக்கு சேவை செய்வதற்காக பிறந்துள்ளன.

ஆகையால் தான் கடவுள் அந்த குடும்பத்தை பூமிக்கு அனுப்பி உள்ளார்.

தீய சக்திகள் ஜெகன்மோகன் ரெட்டி நெருங்காமல் தடுக்கும் நோக்கத்துடன், அவருக்குக் கோவில் கட்டுகிறேன் என கூறியுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே