மேலூர் சொக்கலிங்கபுரம் சுடுகாட்டு பகுதியில், ரோட்டோரம் வயதான தம்பதி உயிருக்கு போராடுவதாகவும்; ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து சென்ற போலீசார் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. ஆனால், கணவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
மனைவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து போலீசார் விசாரணையை துவங்கினர்..
அப்போதுதான், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் – கமலம் தம்பதி என தெரியவந்தது.
இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்.. இவர்களது மகன் சதீஷ்குமார், பாலிடெக்னிக் ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்..
பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்தார் பாண்டியராஜன்.. நல்ல வேலையிலும் சதீஷ்குமார் சேர்ந்தார்.. அங்கு ஆனந்தி என்ற பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் மகளின் மாமியார் வீட்டில் கல்யாண சீர் கேட்டு துன்புறுத்தி வந்துள்ளனர்.. லாக்டவுன் சாக்காக வைத்து கொண்டு மருமகனும் வேலைக்கு போகாமல் இருந்துள்ளார்..
இதனால் தங்கைக்கான சீர் தரும்படி மகனை கேட்டனர் பெற்றோர்.. ஆனால் அதற்கு அவர் மறுத்ததுடன், பெற்றோரையும் மிக மோசமாக திட்டியதாக தெரிகிறது.
மனைவி பேச்சை கேட்டு மகன் திட்டியதையும், மகள் மாமியார் வீட்டில் தவிப்பதையும் நினைத்து மனம் உடைந்தனர்..
மகளின் வாழ்க்கை நிலையையும், மருமகளின் கொடுமையை நினைத்து தம்பதி இருவரும் தற்கொலை செய்து கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சுடுகாட்டு பகுதிக்கு வந்து தற்கொலை செய்துள்ளனர்.
தாங்கள் சேர்த்து வைத்திருந்த ரூபாய் 60 ஆயிரம் பணம் மற்றும் நகைகளை பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு, தனது மகனிடம் வீட்டில் இருந்து எதையும் எடுத்து செல்லவில்லை என்ற தகவல் மட்டும் கூறி விடுமாறு கூறி விட்டுச் சென்றுள்ளனர்.
சுடுகாட்டு பகுதியில் கழுத்தையும், கையையும் அறுத்துக்கொண்டனர்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.