காங்., முன்னாள் தலைவர் ராகுலால், அசாம் மாநிலத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியுமா என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பி உள்ளார்.

காமரூப் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: ராகுல், அவருடன் கூட்டணி அமைத்துள்ள பத்ருதீன் இருவராலும் அசாமை பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியுமா. சராய்காட் போரின் நினைவு தினம் கடந்த வாரம் அனுசரிக்கப்பட்டது.

இந்த போரை தலைமை ஏற்று நடத்திய பொர்புகன், பல ஆண்டுகளாக தாய்மண்ணை முகாலாயர்களிடம் இருந்து பாதுகாத்தார்.அசாமிற்கு சுற்றுலா வரும் ராகுல், பத்ருதீன் தான் அசாமின் அடையாளம் என்கிறார்.

ஆனால், சங்கர்தேவ், மாதவ்தேவ், பொர்புகன் ஆகியோர் தான் அசாமின் அடையாளங்கள். பத்ருதீன், இங்கு ஆட்சி அமைத்தால், அசாமில் ஊடுருவலை தடுத்து நிறுத்த முடியுமா? பா.ஜ., வால் மட்டுமே ஊடுருவலை தடுத்து நிறுத்த முடியும்.

இரட்டைஇன்ஜீன் கொண்ட வளர்ச்சி பற்றி பிரதமர் பேசுகிறார். ஆனால், காங்கிரஸ் ஊடுருவலுக்கு வாய்ப்பு ஏற்படுத்துகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே