#BREAKING : பாலிவுட் நடிகை ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா உறுதி

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்றில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் வகித்து வருகிறது.

அங்கு இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நான் கொரோனா பரிசோதனை செய்தேன் .. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன் .. மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளது .. குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், அதற்கான முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் .. கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவு செய்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக்பச்சன், தனக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து நடிகர் அமிதாப்பச்சனின் மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயா பச்சனுக்கு கொரோனா இல்லை எனவும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே