தமிழக அரசு அறிவித்த பி.இ. அரியர்ஸ் மாணவர்களின் தேர்ச்சி முடிவை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஏற்க மறுப்பு??

பொறியியல் படிப்புகளில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகமான ஏஐசிடிஇ மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் தேர்வுகளையும் தமிழக அரசு ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தது.

அதில் இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வுகளை தவிர மற்ற அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பொறியியல் படிப்பில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கடிதம் எழுதியதாகவும்; அரியர்ஸ் மாணவர்களின் தேர்ச்சியை ஏற்க மறுப்பதாக பல்கலை வட்டார தகவல் வெளியாகி உள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே