ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் போராட்டம் நடத்தி வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதனால், சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது.
தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகிளில் உள்ள ஒரு சில வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்த சம்பவமும் நடைபெற்றது.
இந்நிலையில், ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் கடந்த சில தினங்களாக மழை நீர் தேங்கி யாரும் அந்த வழியே செல்லமுடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால், ஆவேசம் அடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடுரோட்டின் அருகே அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.
அவரிடம் அதிகாரிகள் மற்றும் அதிமுகவினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.