அரசுப் பள்ளிகளில் 1,6,9ஆம் வகுப்புகளுக்கு வரும் 17ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24ம் தேதி முதல் தொடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

தனியார் பள்ளிகள் எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கையை இணையதளம் மூலம் நடத்த வேண்டும் என கூறியுள்ளார். மாணவர்கள் பள்ளி விட்டு பள்ளி மாறுதல்களையும் வரும் திங்கட்கிழமை முதல் மேற்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா சூழலில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சாத்தியமே இல்லை என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே