பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வசந்த மாளிகை, வாணி ராணி, கண்ணன் என் காதலன், உயர்ந்த மனிதன், சிவகாமியின் செல்வன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்தவர் பழம் பெரும் நடிகை வாணிஸ்ரீ .
இவரது மகன் அபிநய வெங்கடேஷ் (36), செங்கல்பட்டு அடுத்த ஆனூர் பகுதியில் பழைய காலத்து பங்களாவை வாங்கி தூய்மைப்படுத்தி தங்கி வந்தார்.
பெங்களூரு அரசு மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் அபிநய வெங்கடேஷ் கார்த்திக், வீட்டுல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவரது உடலை கைப்பற்றிய திருக்கழுக்குன்றம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.