நடிகை தமன்னா, அவரது பெற்றோர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “எனது பெற்றோர்களுக்கு லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் உள்ள அனைவரும் உடனடியாக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
முடிவுகள் இப்போது வந்துவிட்டன, துரதிர்ஷ்டவசமாக எனது பெற்றோர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
நானும் ஊழியர்களும் உட்பட மீதமுள்ள குடும்ப உறுப்பினர்கள் கொரோனா பாதிப்பில்லை. கடவுளின் கிருபையால் அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்.
உங்கள் எல்லா பிரார்த்தனைகள் மற்றும் ஆசீர்வாதங்களும் அவர்களை மீட்பதற்காக உதவும்.” என்று தெரிவித்துள்ளார்.